இலங்கை உள்ளூராட்சி நிறுவகத்தினால் நடாத்தப்பட்ட உயர் டிப்ளோமா சான்றிதழ் பாடநெறி, உள்ளூராட்சி டிப்ளோமா சான்றிதழ் பாடநெறி (அதிகாரிகளுக்கான) மற்றும் உள்ளூராட்சி டிப்ளோமா சான்றிதழ் பாடநெறி (பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான) ஆகிய மூன்று பாடநெறியினை வெற்றிகரமாக முடித்த 120 பயிலுனர்களுக்கான டிப்ளோமா சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு நவம்பர் 18 ஆம் திகதி 2022 பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (லோட்டஸ் மண்டபம்) காலை 8.30 மணிக்கு நடைபெற்றது.
இந்நிகழ்வில், கௌரவ மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர, கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஷிரந்த ஹீன்கெந்த மற்றும் இலங்கை உள்ளக ஆளுகை நிறுவக (SLILG) த்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி சூரதிஸ்ஸ திஸாநாயக்க ஆகியோர்கள் உட்பட அதிகமான பேராசிரியர்கள் கலந்துக் கொண்டனர்.